Tuesday, February 8, 2011

வாழ்க்கை

நொடியில் தவறிவிடும் பேருந்து

கனவு முடியும் முன்

களைந்து விடும் தூக்கம் ,

வேறொருவரின் கையில்

நாம் விரும்பிய பரிசுப்பொருள் ,

எடுப்பதற்குள் ஓய்ந்துவிடும்

அலைபேசியின் அழைப்பு ,

நினைவுக்கு வரும் முன்

போக்குவரத்தில் மறைந்து விடும்

எங்கேயோ பார்த்த முகம்

வாழ்கை தான் எவ்வளவு நிச்சயமற்றது ....

2 comments:

  1. தோழியே தங்கள் கவிதை அருமை

    ReplyDelete
  2. அருமை! அருமை! அருமை!

    ReplyDelete