Friday, April 8, 2011

யாருமற்ற சபையின் மௌனங்கள்..

தோல்விகளின் வரலாற்றை

நாம் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்

சமரசங்களின் மீது

நம்பிக்கையிழந்த அடையாளங்கள்

அதன் மேஜையில்..

நகக் கீறலின் வடுவைப் போல்

தங்கி விடுகிறது..

யாருமற்ற சபையின்

வனையப்பட்ட மௌனங்கள்..

சொற்ப சொற்களுடன் போரிடுகின்றன

யாவற்றையும்

குறிப்பெடுத்துக் கொள்ளும்படி..!

Wednesday, April 6, 2011

காலம்

நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ

நம்மிடம் இருப்பது மூன்று தெரிவுகள் தான்

நேற்று இன்று நாளை ....

மூன்று கூட இல்லை

ஏன்னென்றால்

தத்துவவாதிகள் சொல்வது போல

நேற்று என்பது நேற்றுதான்

அது நமது நினைவுகளில் மட்டுமே

தங்கிஇருக்கிறது

ஏற்கனவே பறிக்கப்பட்ட ரோஜாவிலிருந்து

விளையாடுவதற்கான சீட்டுக்கட்டுகள்

இரண்டு மட்டுமே உள்ளன ;

நிகழ்காலம் எதிர்காலம்

இல்லை

இரண்டு கூட இல்லை

ஏன்னென்றால்

நிகழ்காலம் என்பது

கடந்த காலத்தின் விளிம்பை

தொட்டுக் கொண்டிருக்கிறதே தவிர

அது ஒன்றும்

நிகழ்காலத்தில் இல்லை

இளமையை போல்

அதுவும் செலவாகிவிட்ட ஒன்று

கடைசியில் நம்மிடம் இருப்பது

எதிர்காலம் மட்டுமே

நான்

எனது மதுகோப்பையை

அந்த வராத நாளுக்காக

உயர்த்துகிறேன்

நம்மிடம்

இருப்பது

அது

மட்டும்தானே ?