Saturday, June 4, 2011

மிச்சம் !

சந்தர்பங்களின் சாத்தியத்திற்கு

உதவக்கூடுமென

சேருமிடத்தை மாற்றியவாறு

கணத்துக்கொண்டே போனது

ஓர் பயணம் …

எங்கும் இறங்க மனமின்றி

இருப்பின் தடயங்கள் ,

இழந்த இரவுகளை

எண்ணிக்கொண்டு

கிளம்பும் போதெல்லாம்

நினைவுகளை சுமந்து போகிற

ஏதேனுமொரு திசையில்

குறுக்கிடும் காகத்திற்கு

தெரியாது

எதிர்பார்புகளின் குவியலோடு

அலையும் வாழ்வு பற்றி

-கவிதா ரவீந்தரன்


நன்றி திண்ணை
http://puthu.thinnai.com/?p=632