Monday, April 11, 2011

அவனுக்கு அவள் அந்நியமாய் ....

எழுத நினைத்து

எழுதாமல் விட்ட

எத்தனையோ

தருணங்களை

தணிக்கை

செய்யாமல்

முன்வைக்க

முடியுமா ....

அவனுக்கு

அவள் அந்நியமாய் ....

அவன்

தனது நிழலை

புணர்ந்து

கொண்டிருக்கிறான் ...

என் எழுத்தில்

என் குருதியின்

வாடையும்

சுவையும்

தெரிகிறதா

உனக்கு ?

உள் அதிர்வுகளை

உனக்கு

முத்தமாக

மாரித்தந்தேன்

உனது சிலிர்ப்பை

நீ கவிதைஎன்றாய்

நான் காதல் என்றேன்

அவ்வளவே ...

செல்லரித்து

சிதைந்த

விரிசலுற்றிருந்த

சுவரில் ...

கவிதை எழுதிக் கொண்டிருந்த

அவளை பார்த்து

பயங்கொண்டு ஓடியது

எட்டுக்கால் பூச்சி ...

கைக்கு சிக்கவில்லை

இருந்தும்

எழுதிகொண்டிருக்கிறது

இன்னுமொரு காதலுக்காக .....