Friday, April 8, 2011

யாருமற்ற சபையின் மௌனங்கள்..

தோல்விகளின் வரலாற்றை

நாம் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்

சமரசங்களின் மீது

நம்பிக்கையிழந்த அடையாளங்கள்

அதன் மேஜையில்..

நகக் கீறலின் வடுவைப் போல்

தங்கி விடுகிறது..

யாருமற்ற சபையின்

வனையப்பட்ட மௌனங்கள்..

சொற்ப சொற்களுடன் போரிடுகின்றன

யாவற்றையும்

குறிப்பெடுத்துக் கொள்ளும்படி..!

2 comments:

  1. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !
    தோல்விகள்தான் நம்மை வெற்றிக்கு அழைத்து செல்லும்!
    இயக்குனர் மணிரத்னத்திற்கு கதை சொல்ல தெரியவில்லை என்றார், இயக்குனர் ஸ்ரீதர். மணிரத்னம் தொட்ட சிகரங்கள் உங்களுக்கு தெரியும்!

    ReplyDelete