Wednesday, May 25, 2011

இவைகள் !

ஒரு பறவையின் நீலச் சிறகு ...

இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும்

உன் பார்வை ...

அன்னியமாக உருக்காட்டி

மறையும் என்னுருவம் ...

தொலைந்த பயணத்தின்

தொடக்க நாட்கள் ...

கொஞ்சமும்

இங்கிதமற்ற முறையில்

சலனப்படும் மணம்..

நமக்கு நாமே

எழுதிக்கொண்ட ஓர் இரவு .....

பூட்டிய வீட்டின் முன்

விட்டெறிந்த கடிதம் ...

மற்றும்

என் வருகைக்காக

காத்து பதுங்கி

முகம் புதைத்திருக்கும்

கருப்பு நிற நாய்…

இவைகள் .,

இவைகள் மட்டும்தான்

இன்று எனக்கு சொந்தமானவை ....!

-கவிதா ரவீந்தரன்


நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311052218&format=html

No comments:

Post a Comment