Friday, December 3, 2010

நான்

பிரிந்திருந்த ஐந்தாம் நாளில் 
 
மெல்ல முளைத்தது சோகம் 
 
முதன் முதலில் கண்ட காலங்கள் 
 
புன்னகை மட்டும் பரிமாறிக்கொண்ட நிமிடங்கள் 
 
மெல்லத் தொடங்கி 
 
தீவிரமாகத் தொட்டுக் கொண்ட நேரங்கள் 
 
இரண்டு நாள் செல்ல 
 
சோகம் நிறம் மாறி 
 
மூர்க்கத்துடன் காமம் 
 
எங்கோ நின்று அலைக்கும்
 
வீடு நோக்கித் திறந்து கிடந்தன கண்கள் 
 
கதவு திறந்து உள்ளே நுழையவும் 
 
என்னை பிடித்துக் கொள்கிறது
 
சுயமுனைப்புடன்
 
நான் போகும்போது விட்டுப்போன
 
நானென்னும் சுயம்.

1 comment:

  1. சில காயங்களுக்கு, காலம்தான் அரு மருந்து!

    ReplyDelete