Saturday, November 20, 2010

நிச்சயம்

நினைவறிந்த நாளிலிருந்து
இருட்டு இடுகாடு சுடுகாடு
எதுவென்றாலும் பயந்தான்
அறியாத ஊர்களில்

இறுதியூர்வலங்களையும்
தெரியாத நபர்களின்
சவ அடக்கங்களையும்
முடிந்தவரை விலக்கி நடந்துள்ளேன்.

சர்வ நிச்சயமாய்............
என்னையும் ஒருநாள்
தூக்கிவந்தொரு காட்டில்
"இன்றிலிருந்து இங்கே தூங்கடா ராஜா"
என்று கிடத்திவிடத்தான் போகிறார்கள்
இருந்தும் இன்னும்
எதுக்கென்றுதெரியவில்லை
இருட்டு இடுகாடு சுடுகாடு
எல்லாவற்றுக்கும் பயம்தான்

2 comments:

  1. நிதர்சனமான பயம்...

    ReplyDelete
  2. எனக்கு பயமில்லை; மரண பயம் உள்பட.

    ReplyDelete